உள்ளூர் செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

Published On 2023-01-13 15:33 IST   |   Update On 2023-01-13 15:33:00 IST
  • மாதம் ரூ.500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊட்டி,

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்த தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் இதர சுகாதார ஆய்வாளர்களின் நீலகிரி மாவட்ட கூட்டமைப்புக்கான தேர்தல், ஊட்டியில் நடந்தது. இதில் தேர்தல் அலுவலராக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் வேணுகோபால் பணியாற்றினார். ேதர்தலில் தலைவராக கே.டி.மூர்த்தி, செயலாளராக பி.குமாரசாமி, பொருளாளராக ஏ.கார்த்திக், துணைத்தலைவராக ஆர்.சங்கரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த கிரேடு-2 நிலையில் உள்ள சுகாதார ஆய்வாளர்களை கிரேடு-1 ஆக பதவி உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் தினசரி, வாராந்திர, மாதாந்திர அறிக்கைகளை தயார் செய்து அனுப்ப எழுதுபொருள் மற்றும் இதர கட்டணமாக மாதம் ரூ.500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News