உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே மொபட் கவிழ்ந்து மகளுடன் சென்ற தாய் பலி

Published On 2023-07-30 14:25 IST   |   Update On 2023-07-30 14:25:00 IST
  • செல்வி தனது மகளுடன் தேவர்குளம்-கயத்தாறு ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
  • மொபட் கவிழ்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

நெல்லை:

நெல்லயை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செல்வி (வயது 40), மகள் இசக்கியம்மாள் (19). இவர்கள் 2 பேரும் கடந்த 24-ந் தேதி தேவர்குளம்-கயத்தாறு ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாக மொபட் கவிழ்ந்தது. இதில் தாய்- மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News