உள்ளூர் செய்திகள்

கோவை மாநகராட்சியை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்

Published On 2023-07-31 09:54 GMT   |   Update On 2023-07-31 09:54 GMT
  • வைப்புத்தொகை சலுகையை 500 சதுர அடி குடியிருப்பிற்குள் வழங்க வேண்டும்
  • மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கோவை,

கோவை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஏழை மக்கள் குடியிருப்பில் உள்ள பொது குழாய்களை அகற்றக்கூடாது, வைப்புத்தொகை சலுகையை 500 சதுர அடி குடியிருப்பிற்குள் வழங்க வேண்டும், அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது போராட்டக்காரர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Tags:    

Similar News