உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

Published On 2023-06-30 16:02 IST   |   Update On 2023-06-30 16:02:00 IST
  • சிறுமியின் உறவினரான அன்பழகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
  • புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கமைான் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு அவரது உறவினரான 45 வயது அன்பழகன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய் வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார். பின்னர் புகார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் அன்பழ கனிடம் விசாரணை நடத்தினர். இதில் புகார் உண்மை என்பது தெ ரிய வந்தது.

இதனை யடுத்து அன்ப ழகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News