உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2022-12-20 14:52 IST   |   Update On 2022-12-20 14:52:00 IST
  • சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையில் போலீசார் மேலதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
  • ஆத்திரம் அடைந்த முருகன் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

களக்காடு:

களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையில், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அமலன் மற்றும் போலீசார் மேலதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே கீழதேவ நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகன் என்ற சுண்டல் முருகன் (வயது47) என்பவர் வெள்ளை நிற சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயற்சி செய்தார்.

இதை கண்ட போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் போலீசாரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களும் ரூ.1050-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News