உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர்போலீசார் விசாரணை

Published On 2023-08-24 09:56 GMT   |   Update On 2023-08-24 09:56 GMT
  • திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
  • 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் சரண்யா (வயது 31). இவருக்கும் வடலூர் சேராகுப்பத்தைச் சேர்ந்த ராஜி மகன் பாலகுரு (38) என்பவருக்கும் கடந்த 21-ம்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.

இதனால் பாலகுரு வரதட்சணையாக 20 பவுன் நகை 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர் சரண்யா பி.என்.பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News