உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை தாக்கிய கணவரின் கள்ளக்காதலி

Published On 2022-06-23 10:05 GMT   |   Update On 2022-06-23 10:05 GMT
  • கணவரும், இளம்பெண்ணும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது
  • பெண்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை :

கோவை சித்தாபுதூரை சேர்ந்த 36 வயது இளம்பெண் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் எனது கணவருடன் சித்தாபுதூர் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது கணவருக்கு இளங்கோ நகரில் வசித்து வரும் 48 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. எனது கணவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் எனக்கு தெரியவரவே நான் எனது கணவரை கண்டித்தேன். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நான் எனது கணவரின் செல்போனை பார்த்தபோது எனது கணவரும், அந்த இளம் பெண்ணும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது இதனைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் .

இதுகுறித்து நான் என் கணவரிடம் கேட்டபோது மீண்டும் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நான் இதுகுறித்து கேட்பதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி வெளியே தள்ளிவிட்டார். எனவே எனது கணவருடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு தட்டிக்கேட்ட என்னை தாக்கிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் அந்த பெண்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News