உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கம்பம்: சூறைக்காற்றால் முறிந்து விழுந்த மின்கம்பங்கள்

Published On 2023-03-28 13:07 IST   |   Update On 2023-03-28 13:07:00 IST
  • குடியிருப்பு பகுதியில் 2 மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தன.
  • ஊராட்சி பணியாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கம்பம்:

தேனி மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காண ப்பட்டது. பிறகு மாலையில் வெப்பம் தணிந்து மழை பெய்வதற்கான சூழல் காணப்பட்டது. மாவட்ட த்தின் பல பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று கம்பம் மற்றும் அதன்சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நகரின் பிரதான சாலையில் இருபுறமும் உள்ள கழிவுநீரோடை நிரம்பி சாலையில் வழிந்தோடியது. இதேபோல கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் கூரைகள், தகரங்கள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இந்திரா குடியிருப்பு பகுதியில் 2 மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்தன. இதனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்க ப்பட்டது. இதையடுத்து ஊராட்சி தலைவர் மொக்கப்பன் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News