உள்ளூர் செய்திகள்

பாளையில் டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு

Published On 2022-11-12 09:26 GMT   |   Update On 2022-11-12 09:26 GMT
  • பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
  • மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.

நெல்லை:

பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவிலுக்கு சென்றார். வி.எம்.சத்திரம் சோதனைசாவடி அருகே சாலையில் லாரியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் தூங்கி உள்ளார்.

அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் - செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News