உள்ளூர் செய்திகள்

நாட்டு வெடியை கடித்ததில் பசுமாடு வாய் சிதைந்தது

Published On 2022-06-09 15:38 IST   |   Update On 2022-06-09 15:38:00 IST
  • விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம்
  • குன்னூர் ராணுவ மையம் அருகே நடந்தது

ஊட்டி,

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் அருகே உள்ளது ஆஸ்பிட்டல்சேரி. இந்த பகுதியைச் சேர்ந்த ஆபி என்பவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார்.

நேற்று அந்த மாடு அங்கு மேய்ச்சலுக்காக சென்றது. அப்போது வயல் பகுதியில் கிடந்த நாட்டுவெடியை கடித்தது. இதில் நாட்டு வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து பசுமாட்டின் வாய் பகுதி சிதைந்தது.

அந்த மாடு ரத்தம் சொட்ட, சொட்ட வேதனையுடன் அலறியபடி உள்ளது. கால்நடை டாக்டர்கள் மூலம் மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வெலிங்டன் ேபாலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாய பயிர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் வனவிலங்குகளை விரட்டுவதற்காக யாராவது நாட்டு வெடிகளை வைத்திருக்கலாம், அதனை அறியாமல் பசுமாடு அதனை கடித்து இருக்கலாம் என தெரிகிறது. அவ்வாறு வனவிலங்குகளை சித்ரவதைக்குள்ளாகும் வகையில் நாட்டு வெடிகளை பயன்படுத்தியது யார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது. அந்த பகுதியில் ஏற்கனவே இதுபோன்று நாட்டு வெடி வெடித்து 3 காட்டு மாடுகள் இறந்துள்ளன. தற்போது மேலும் ஒரு பசுமாடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாட்டு வெடியை பயன்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் பசுமாடு சித்ரவதைக்குள்ளாகி அவதிப்படும் சம்பவத்துக்கு வனவிலங்கு ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News