உள்ளூர் செய்திகள்

மறியல் போராட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்

Published On 2022-08-31 07:58 GMT   |   Update On 2022-08-31 07:58 GMT
  • அரிசி, மாவு, தயிர், வெண்ணை, நெய் போன்ற உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
  • ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

தரங்கம்பாடி:

ஒன்றிய பிஜேபிஅரசின் மக்கள் விரோத கொ ள்கையை கண்டித்து செம்பனார்கோயில் பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர்.

போராட்டத்திற்கு மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரராஜ், செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தாங்கினர்.

அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது.

அரிசி மாவு தயிர் வெண்ணை நெய் போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்ய வேண்டும்.

ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

உயிர் காக்கும் மருந்து மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

மின்சார விநியோகத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழ ங்காதே. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்தனர்.

நிகழ்ச்சியில் வேதநாயகம், சின்னத்துறை, இராதா கிருஷ்ணன், தவசிமுத்து, தரணி, தமிழ்ச்செல்வி, உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

Tags:    

Similar News