உள்ளூர் செய்திகள்

பிரிட்ஜை திறந்தபோது கதவு மோதி சிறுவன் பலி- உறவினர் கைது

Published On 2022-10-07 09:00 GMT   |   Update On 2022-10-07 09:00 GMT
  • பிரிட்ஜ் பெட்டியின் கதவு சிறுவன் மீது பலமாக மோதியதாக கூறப்படுகிறது.
  • படுகாயமடைந்த சிறுவனை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26).

இவரது உறவினர் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார், தனது மகன் ஜெகதீஸ்வரன் (2) மற்றும் குடும்பத்தினருடன் கும்பகோணம் வந்து வினோத்குமார் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி வினோத்குமார் வீட்டில் இருந்த பிரிட்ஜ்க தவை திறந்து ள்ளார்.

அப்போது அருகே நின்று கொண்டிருந்த சிறுவன் ஜெகதீஸ்வரன் மீது பிரிட்ஜ் பெட்டியின் கதவு பலமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த ஜெகதீஸ்வரன் மயங்கி விழுந்தான். பின்னர் அவனை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

ஆனால், போகும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான்.

இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News