உள்ளூர் செய்திகள்

வாலிபரை தாக்கிய பேக்கரி கடை உரிமையாளர் கைது

Published On 2023-05-18 14:40 IST   |   Update On 2023-05-18 14:56:00 IST
  • பூவரசன், இவரது நண்பர் ராஜா ஆகியோர் சேர்ந்து மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, மே.18-

கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட் ஜாகீர்வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது28).

இவர் பேக்கரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

அந்த பேக்கரி கடையின் உரிமையாளர் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளியை சேர்ந்த பூவரசன், இவரது நண்பர் ராஜா ஆகியோர் சேர்ந்து மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.

Similar News