உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2023-10-19 08:46 GMT   |   Update On 2023-10-19 08:46 GMT
  • அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சம்சிகாபுரத்தில் அ.தி.மு.க. கொடியினை பாறைப்பட்டி கிளைச்செயலாளர் சுபாஷ்ராம் ஏற்றினார்.
  • தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார்.

சங்கரன்கோவில்:

அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவை முன்னிட்டு குருவிகுளம் வடக்கு ஒன்றியம் சம்சிகாபுரத்தில் அ.தி.மு.க. கொடியினை பாறைப்பட்டி கிளைச் செயலாளர் சுபாஷ்ராம் ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் காரிச்சாத்தான் முன்னாள் ஊராட்சி செயலாளர் முத்தையா, நடராஜன், திருநாவுக்கரசு, புதுச்சுப்புலாபுரம் கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தர்மராஜ், பிரித்விராஜ், கார்த்திகேயன், விக்னேஷ்வரன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் விஜயராணி, ஜெயராம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News