தார்பாய் கொண்டு மூடாமல் செல்லும் மணல் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி
- மணல் ஏற்றி வரும் லாரிகள் தார்பாய் கொண்டு மணலை மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்று விதிமுறை இருந்த போதும், அதனை கடைபிடிக்காமல் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
- மருவூர் மணல் குவாரி இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. அப்படி இருந்தும் கூட மணல் லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கின்றனர்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகில் கொள்ளிடம் ஆற்றில் மருவூர் மற்றும் கோவிலடியில் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட்டு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் மணல் ஏற்றிய லாரிகள் திருக்காட்டுப்பள்ளி நகரின் வழியாக வெளியூர்களுக்கு சென்று வருகின்றன. இவ்வாறு சென்றுவரும் லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஏற்றப்பட்ட மணல் மீது தார்பாய் கொண்டு மூடாமல் அப்படியே சென்று கொண்டுள்ளன. இதனால் லாரிகள் போகும் வேகத்தில் வீசும் காற்றால் லாரியில் உள்ள மணல் பின்னால் வரும் வாகனங்களை ஓட்டி வருபவர்களின் கண்களில் விழுந்து மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
மணல் ஏற்றி வரும் லாரிகள் தார்பாய் கொண்டு மணலை மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்று விதிமுறை இருந்த போதும், அதனை கடைபிடிக்காமல் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மருவூர் மணல் குவாரி இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. அப்படி இருந்தும் கூட மணல் லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கின்றனர். உடனடியாக மணல் ஏற்றி வரும் லாரிகள் முறையாக தார்பாய் கொண்டு மூடி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.