உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.


தென்காசி மாவட்ட ஊராட்சி குழுக்கூட்டம் - 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2022-10-27 08:28 GMT   |   Update On 2022-10-27 08:28 GMT
  • தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழுக் கூட்டம் நடைபெற்றது.
  • மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1,04,07,520-க்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்ட ஊராட்சியின் சாதாரண குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். 15-வது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.2,03,37,000-க்கும், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1,04,07,520-க்கும் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் உட்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைத்து வட்டாரங்களிலிருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News