உள்ளூர் செய்திகள்

கோவை குற்றாலத்தில் தற்காலிக தடை நீக்கம்

Published On 2023-10-05 09:18 GMT   |   Update On 2023-10-05 09:18 GMT
  • காலை முதலே கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
  • கடந்த 1-ந் தேதி முதல் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

கோவை,

கோவை குற்றாலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவி யில் நீர்வ ரத்து அதிகரித்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 1-ந் தேதி முதல் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இதனால் கடந்த 4 நாட்களாக கோவை குற்றாலத்துக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். தற்போது அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீண்டும் சுற்றுலாபயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை முதலே கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தடை நீக்கப்பட்டு குளியலுக்கு அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்த னர்.

Tags:    

Similar News