உள்ளூர் செய்திகள்
கோவையில் கீழே கிடந்த பணத்தை மீட்டு போலீசிடம் ஒப்படைத்த வாலிபர்கள்
- மையத்திற்குள் ரூ.7 ஆயிரம் கிடந்தது.
- போலீசார் பணத்தை தொலைத்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சரவணம்பட்டி,
கோவை குரும்பபாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம் உள்ளது. இந்த ஏ.டி.எம்மிற்கு வரதையங்கார்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன்(26), லட்சுமி கார்டனை சேர்ந்த சதீஷ்குமார்(30) பணம் எடுக்க சென்றனர். அப்போது மையத்திற்குள் ரூ.7 ஆயிரம் கிடந்தது. இதை பார்த்த அவர்கள் உடனே அதனை எடுத்து சென்று கோவில் பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பணத்தை தொலைத்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.