உள்ளூர் செய்திகள்
- மேலே சென்ற மின் வயர்மீது எதிர்பாராத விதமாக கைவைத்து விட்டார்.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஞானம் நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 23). இவர் தஞ்சை- நாகை ரோட்டில் புதிதாக ஒரு நிறுவனம் தொடக்க விழா சம்பந்தமாக விளம்பர பதாகை வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மேலே சென்ற மின் வயர்மீது எதிர்பாராத விதமாக கை வைத்து விட்டார்.
இதில் மின்சாரம் தாக்கி ஆகாஷ் தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி ஆகாஷ் இறந்தார்.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.