உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் பலி

Published On 2022-10-02 08:35 GMT   |   Update On 2022-10-02 08:35 GMT
  • மாம்பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
  • அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டும் வயிற்று வலி தீரவில்லை.

எருமப்பட்டி:

நாமக்கல் மாவட்டம எருமப்பட்டி அருகே உள்ள சிங்களம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மகாமுனி (வயது 44). மாம்பழ வியாபாரி. இவரின் சொந்த ஊர் கரூர் மாவட்டம் குளித்தலை மணத்தட்டை ஆகும். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரின் இளைய மகன் சந்தோஷ் (18) தந்தையுடன் மாம்பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சந்தோஷ் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருந்து மாத்திரை சாப்பிட்டும் வயிற்று வலி தீரவில்லை. இந்த நிலையில் சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவரது தந்தை மகாமுனி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சந்தோஷ் வீட்டில் இருந்த மாமரத்திற்கு அடிக்கும் மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சந்தோஷை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News