உள்ளூர் செய்திகள்

பிரபு

மொபட் மீது கார் மோதி வாலிபர் பலி

Published On 2022-10-27 09:32 GMT   |   Update On 2022-10-27 09:32 GMT
  • கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
  • பைக்குடன் தூக்கி வீசப்பட்டு பிரபு பலத்த காயமடைந்தார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அணிச்சம்பாளையத்தை சேர்ந்த வர் நடராஜன். இவரது மகன் பிரபு (வயது 36). இவர் நேற்று பரமத்திவேலூர் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் பைக்கில் கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அணிச்சம் பாளையம் பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, மதுரையில் இருந்து பெங்களூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று பிரபுவின் மோட்டார் பைக் மீது மோதியது.

இதில் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு பிரபு பலத்த காயமடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், பிரபுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பரமத்தி வேலூர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News