உள்ளூர் செய்திகள்
சேலம் அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை
- சேலம் இரும்பாலை அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- தந்தை திட்டியதால் மனமுடைந்த விக்னேஷ்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் இரும்பாலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 20). மர தச்சுவேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.இந்த நிலை யில் விக்னேஷ்குமார் செல வுக்கு பணம் இல்லத்தால் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இதை அறிந்த அவரது
தந்தை ஏழுமலை சத்தம்போட்டுள்ளார். இதனால்
அவர்களுக்குள் வாக்குவாதம்ஏற்பட்டது. இதனால் மன
முடைந்த விக்னேஷ்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவறிந்து வந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.