உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-10-15 09:19 GMT   |   Update On 2022-10-15 09:19 GMT
  • கடந்த சில வருடங்களுக்கு முன்பு உறவினர் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
  • வெங்கடேஷ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கோவை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 22). இவர் கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

வெங்கடேசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு உறவினர் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் வெங்க டேசுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இதன் காரணமாக வெங்கடேஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

வழக்கம் போல இவர் இரவு பணிக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த வெங்கடேஷ் தனது அறைக்கு சென்றார். அங்கு வைத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த வெங்கடேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வெங்கடேஷ் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News