உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-07-31 09:09 GMT   |   Update On 2022-07-31 09:09 GMT
  • ரவிச்சந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
  • வீட்டில் இருந்த ரவிச்சந்திரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொண்டலாம்பட்டி:

சேலம் கன்னங்குறிச்சி அய்யன் திருமாளிகை மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 28). இவருக்கு திருமணமாகி திவ்யபாரதி (24) என்ற மனைவி உள்ளார்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள ரவிச்சந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த ரவிச்சந்திரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News