உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் சென்ற சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபருக்கு அபராதம்

Published On 2023-11-19 07:19 GMT   |   Update On 2023-11-19 07:19 GMT
  • சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.
  • ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை:

சென்னை அபிராமபுரம் சி.பி.ராமசாமி சாலை, பிம்மண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை முதலமைச்சர் சென்ற சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.

அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரின் பெயர் அஜய்குமார் என்பது தெரியவந்தது. ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News