உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் மேலாளர் விடுவிப்பு

Published On 2023-08-23 15:06 IST   |   Update On 2023-08-23 15:06:00 IST
  • பல்வேறு முறைகேடு புகார்கள் காரணங்களுக்காக கரூர் மாவட்ட மேலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்
  • கரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பொறுப்பை நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கூடுதலாக கவனிப்பார்

கரூர்,

கரூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்தவர் பி.சண்முகவடிவேல். இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இவர் மாவட்ட மேலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், இதுகுறித்து அடுத்த உத்தரவு வரும் வரை நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கமலக்கண்ணன், கரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் எனவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்காக பொது மேலாளர் ஐ.ஆனந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News