உள்ளூர் செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவி.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா; கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

Published On 2023-04-23 10:34 GMT   |   Update On 2023-04-23 10:34 GMT
  • 291 பி.எட் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
  • தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11 ஆயிரத்து 451 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொலை நிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்க ப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 4 ஆண்டு களில் படித்தவர்க ளுக்கு பட்டங்கள் தற்போது வழங்க ப்பட உள்ளது.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு கவர்னரும் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 325 பி.எச்டி படிப்பு முடித்தவர்களுக்கும், 723 எம்.பில், 190 முதுகலை மாணவர்கள், 45 இளங்கலை மாணவர்கள், 291 பி.எட் மாணவர்களுக்கு பட்ட ங்களை வழங்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கு பட்டங்கள் வழங்க ப்பட உள்ளது.

இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்லை க்கழக துணை வேந்தர் டாக்டர் சுதாசே ஷய்யன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்க இருப்பதால், விழாவுக்கான ஏற்பாடுகளை பல்க லைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News