உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சையில், வருகிற 28-ந்தேதி குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமை பொது ஏலம்- கலெக்டர் தகவல்

Published On 2023-04-25 10:23 GMT   |   Update On 2023-04-25 10:23 GMT
  • குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • காலை 11 மணி அளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தஞ்சாவூர் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை சரகத்தில் உள்ள வலையன்குளம், அய்யனார் குளம், நரியன் குளம் ஆகிய குளங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை 1432-ம் பசலிக்கு பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை எடுக்க விரும்புவர்கள் எண்.873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட வேண்டும். அந்த அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News