உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரதம்

Published On 2023-03-19 09:13 GMT   |   Update On 2023-03-19 09:13 GMT
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
  • தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பலர் பேசினர்.

Tags:    

Similar News