உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2023-08-30 07:49 GMT   |   Update On 2023-08-30 07:49 GMT
  • கிறிஸ்டோபர் மீது 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராயபுரம்:

கொருக்குப்பேட்டை டி.கே.கார்டன் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.அவர் காசிமேடு சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 28) என்பதும் மோட்டார் சைக்கிள் திருடி வந்ததும் தெரிந்தது.

அவரை போலீசார் கைதுசெய்தனர். கிறிஸ்டோபர் மீது 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News