உள்ளூர் செய்திகள் (District)

வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை: மனைவி குடும்பத்தினரை குற்றம் சாட்டி எழுதிய கடிதம் சிக்கியது

Published On 2023-11-23 05:38 GMT   |   Update On 2023-11-23 05:38 GMT
  • வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • வாலிபர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 28). கடந்த ஓராண்டுக்கு முன்பு பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள செட்டியூர் பகுதியை சேர்ந்த பகவதி (25) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

பகவதி கர்ப்பம் அடைந்த நிலையில் சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் அருணாச்சலத்தின் தொழில் ரீதியாக அவரது மனைவியின் தந்தை பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாக கூறி, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது மனைவி குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அருணாச்சலம் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் எடுத்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News