உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே வாலிபர் அடித்துக் கொலை- 3 பேரிடம் விசாரணை
- பலத்த காயம் அடைந்த சரத்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
- கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் சரத்குமார் தாக்கப்பட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த சரத்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.