உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே வடமாநில வாலிபர் விபத்தில் பலி

Published On 2023-06-02 08:44 GMT   |   Update On 2023-06-02 08:44 GMT
  • திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வடமாநில வாலிபர் மீது மோதியது.
  • வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வடமாநில வாலிபர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News