உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
- வாலிபர் நண்பர்களுடன் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.
- ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருத்தணியை அடுத்த ஆர்.கே. பேட்டை, ஆதிபராபுரம் காலனி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது26). கூலித் தொழிலாளி.
இவர் நண்பர்களுடன் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது சிவா தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.