உள்ளூர் செய்திகள்

வல்லநாடு அருகே பெண் அடித்துக்கொலை- வாலிபர் கைது

Published On 2022-11-12 06:30 GMT   |   Update On 2022-11-12 06:30 GMT
  • வள்ளியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் தாக்கி கொண்டிருந்தார்.
  • வள்ளியம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வள்ளியம்மாளை அவதூறாக பேசியுள்ளார்.

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் அனந்தநம்பிக்குறிச்சி வடக்கூரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது65). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 7-ந்தேதி வள்ளியம்மாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை முடித்து விட்டு மாலை வீடு திரும்பி உள்ளார்.

அப்போது வள்ளியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் தாக்கி கொண்டிருந்தார். இதைப் பார்த்த வள்ளியம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வள்ளியம்மாளை அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் கத்தியுடன் கூடிய துணிப்பை வைத்து தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த வள்ளியம்மாளை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அதனை கொலை வழக்காக மாற்றிய முறப்பநாடு போலீசார் கணேசனை கைது செய்தனர்.

Tags:    

Similar News