உள்ளூர் செய்திகள்
பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சுதா அணிந்து இருந்த 6 பவுன் செயினை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
- பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவர் சிங்கபெருமாள் கோவில்-ஒரகடம் சாலையில் பெரியார் நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சுதா அணிந்து இருந்த 6 பவுன் செயினை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 3 பேரை கைது செய்து இருந்தனர். இந்தநிலையில் இந்த வழிப்பறி தொடர்பாக புதுபெருங்களத்தூர், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.