உள்ளூர் செய்திகள்

அடகு கடைக்காரர் அடித்து கொலை- வாலிபர் கைது

Published On 2022-10-06 06:13 GMT   |   Update On 2022-10-06 06:13 GMT
  • ரசீது இல்லை செல்போனை தர வேண்டுமென சியாமு கேட்டுள்ளார். ராஜகோபால், மறுத்துள்ளார். இதில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.
  • ஆத்திரமடைந்த சியாமு, ராஜகோபாலை, கடுமையாக தாக்கினார்.

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கடை தெருவை சேர்ந்தவர் ராஜகோபால், (வயது 70). இவர் சேத்துப்பட்டு போளூர் சாலையில் அடகு கடை நடத்தி வருகிறார்.

இவரிடம் சேத்துப்பட்டு பழம் பேட்டை வெங்கடாஜலபதி, தெருவை சேர்ந்த சியாமு (எ) மூர்த்தி, (வயது 19). செல்போனை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். கடந்த 18-ந் தேதி அடகு வைத்த செல்போனை சியாமு மீட்க சென்றார்.

அப்போது அடகு வைத்ததற்கான ரசீது இல்லை என்று தெரிய வருகிறது. ராஜகோபால், ரசீது கண்டிப்பாக தேவை என கேட்டுள்ளார்.

ரசீது இல்லை செல்போனை தர வேண்டுமென சியாமு கேட்டுள்ளார். ராஜகோபால், மறுத்துள்ளார். இதில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சியாமு, ராஜகோபாலை, கடுமையாக தாக்கினார்.

இதில் காயமடைந்த ராஜகோபால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சியாமு கைது செய்தனர்.

Tags:    

Similar News