உள்ளூர் செய்திகள்

திருப்பூர் அருகே மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2023-09-11 12:28 IST   |   Update On 2023-09-11 12:28:00 IST
  • மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழனிசாமி பழகி வந்தார்.
  • சமீபத்தில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

திருப்பூர்:

காஞ்சிபுரம் சூரிய நல்லூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 25). இவர் காங்கயத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண்ணை திருமணம் செய்தார்.

அவரது மனைவி 2-வதாக கர்ப்பம் தரித்த போது மனைவியை பார்ப்பதற்காக பழனிச்சாமி அடிக்கடி காங்கயம் வந்து சென்றார்.

அப்போது மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழனிசாமி பழகி வந்தார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் பழனிசாமி ஈடுபட்டார்.

சமீபத்தில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. குடும்பத்தினர் விசாரித்த போது, பழனிசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பழனிசாமி மீது காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News