உள்ளூர் செய்திகள்

கேளம்பாக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வாலிபர் கைது

Published On 2022-09-29 06:14 GMT   |   Update On 2022-09-29 06:14 GMT
  • கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்ஸன் ஜோஸ் தலைமையிலான போலீசார் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர்.
  • வாலிபரிடம் அரிய வகை போதைப்பொருளான மெத்தம் பெட்டமைன் பயன்படுத்தி வந்தது கண்டுபிடித்து கைப்பற்றினர்.

திருப்போரூர்:

கேளம்பாக்கம் பகுதியில் வாலிபர்கள் சிலர் மெத்தம் பெட்டமைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்ஸன் ஜோஸ் தலைமையிலான போலீசார் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த வாலிபரிடம் சோதனை நடத்தினர். அவர், அரிய வகை போதைப்பொருளான மெத்தம் பெட்டமைன் பயன்படுத்தி வந்தது கண்டுபிடித்து கைப்பற்றினர். இந்த வகை போதைப்பொருள் 1 கிராம் ரூ.3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதை பெங்களூரில் இருந்து வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து குடியிருப்பில் தங்கி இருந்த மணிகண்டனை(29) போலீசார் கைது செய்தனர். அவரது பெற்றோர் மும்பை பகுதியில் வசித்து வருவதும், தொழில் தொடங்கப் போவதாக கூறி மணிகண்டன் கேளம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.

Tags:    

Similar News