உள்ளூர் செய்திகள்

நண்பரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த சென்னை வாலிபர்

Published On 2022-07-05 09:25 GMT   |   Update On 2022-07-05 09:25 GMT
  • என்னை மிரட்டி என்னிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பெற்று உள்ளார். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.
  • எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றி சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை:

கோவை சவுரிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

எனது கணவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். நானும் எனது கணவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்தேன்.

எங்களது கடைக்கு சென்னையை சேர்ந்தவரும் தற்போது கோவையில் தங்கி இருந்து கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் எனது கணவரின் நண்பர் சங்கர் (வயது 35) என்பவர் அடிக்கடி வந்து சென்றார்.

அப்போது எனக்கும, சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. எனது கணவர் இல்லாத நேரத்தில் கடைக்கு வரும் அவர் என்னுடன் நட்பாக பழகினார்.

ஒருநாள் என்னை ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து நாங்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதன் பின்னர் இந்த புகைப்படத்தை எனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என என்னை மிரட்டினார்.

மேலும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து மீண்டும் ஓட்டலுக்கு வருமாறு என்னை வற்புறுத்தினார். ஓட்டலில் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கற்பழித்தார். மேலும் உல்லாசமாக இருப்பதை எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டார்.

பின்னர் உனது கணவரை விவாகரத்து செய்து விடு, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறினார். இதனை நம்பிய நான் எனது கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் சங்கர் தொடர்ந்து என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நான் வர மறுத்தால் ஒன்றாக இருக்கும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி வருகிறார்.

என்னை மிரட்டி என்னிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பெற்று உள்ளார். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றி சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் இளம்பெண்ணை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்து நகை மற்றும் பணத்தை பெற்று ஏமாற்றிய சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News