உள்ளூர் செய்திகள்
கூவத்தூர் அருகே மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி
- கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சீக்னாங்குப்பம் பகுதியில் நடைபெறும் கட்டிட பணியில் லோகேஷ் வேலை பார்த்து வந்தார்.
- முதல் மாடியில் பணியில் இருந்த போது லோகேஷ் கால் தவறி கீழே விழுந்தார்.
மாமல்லபுரம்:
வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 40). வெல்டரான இவர், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சீக்னாங்குப்பம் பகுதியில் நடைபெறும் கட்டிட பணியில் வேலை பார்த்து வந்தார். முதல் மாடியில் பணியில் இருந்த போது கால் தவறி கீழே விழுந்தார்.
இதில் தலை குப்புற விழுந்ததால் கழுத்து ஒடிந்து சம்பவ இடத்திலேயே லோகேஷ் பலியானார். இது குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.