உள்ளூர் செய்திகள்

திருத்தணியில் பிரசவத்துக்கு சென்றபோது ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

Published On 2023-03-07 07:49 GMT   |   Update On 2023-03-07 07:49 GMT
  • 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
  • ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார்.

திருத்தணி:

திருத்தணியை அடுத்த அருங்குளம் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெனிபர் (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெனிபருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார். போகும் வழியிலேயே ஜெனிபருக்கு பிரசவ வலி அதிகமானது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்சிலேயே ஜெனிபருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.

பின்னர் தாயையும், குழந்தையையும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் தற்போது நலமாக உள்ளனர். ஜெனிபருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News