உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்

Published On 2022-07-14 15:18 IST   |   Update On 2022-07-14 15:18:00 IST
  • கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு 42 வீடுகளுக்கு மட்டும் முதல்கட்டமாக அதிகாரிகள் சீல் வைத்தனர்.
  • ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் திடீரென அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த சைனாவரம் கிராமத்தில் பழமை வாய்ந்த காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகள், மற்றும் கட்டிடங்கைள அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சைனாவரம் காளத்தீஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் மற்றும் அதிகாரிகள் சைனாவரத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்போடு சீல் வைக்க வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு 42 வீடுகளுக்கு மட்டும் முதல்கட்டமாக அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் திடீரென அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர்.

Tags:    

Similar News