உள்ளூர் செய்திகள்

வேப்பம்பட்டு அருகே வேனில் இருந்த பேட்டரி திருட்டு

Published On 2023-02-11 17:45 IST   |   Update On 2023-02-11 17:56:00 IST
  • வெல்டிங் கடை எதிரில் தனது மினி வேனை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி இருந்தார்.
  • சரவணன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

வேப்பம்பட்டு:

திருவள்ளூரை அடுத்த புட்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 46) இவர் வேப்பம்பட்டு அருகே ராம் நகர் பகுதியில் சி.டி.எச். சாலையோரம் உள்ள வெல்டிங் கடை எதிரில் தனது மினி வேனை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி இருந்தார். நேற்று காலை அவர் வந்து பார்த்தபோது அவரது வேனில் பொருத்தப்பட்டிருந்த ரூ.8 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சரவணன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரியை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News