உள்ளூர் செய்திகள்

வண்டலூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது

Published On 2022-11-01 17:32 IST   |   Update On 2022-11-01 17:32:00 IST
  • கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
  • கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News