உள்ளூர் செய்திகள்
சனாதன தர்மம் பற்றி பேசுவதா? கவர்னர் ரவிக்கு வைகோ கண்டனம்
- இந்தியாவை வழி நடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல.
- உடனடியாக குடியரசு தலைவர் தமிழக கவர்னரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என்று பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தியாவை வழி நடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல.
கவர்னர் ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.
உடனடியாக குடியரசு தலைவர் தமிழக கவர்னரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.