உள்ளூர் செய்திகள்

தண்டையார்பேட்டையில் வியாபாரிகளை கத்திமுனையில் மிரட்டி மாமூல் வசூலித்த 2 பேர் கைது

Published On 2023-05-30 07:02 GMT   |   Update On 2023-05-30 07:03 GMT
  • புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

ராயபுரம்:

தண்டையார்பேட்டை பஸ் டிப்போ மற்றும் சேணிஅம்மன் கோவில் அருகில் வண்டியில் காய்கறி கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News