உள்ளூர் செய்திகள்

உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை வழிமறித்து அரிவாள் வெட்டு

Published On 2023-07-22 12:15 IST   |   Update On 2023-07-22 12:15:00 IST
  • மணியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் மப்பேடு போலீசுக்கு தகவல் அளித்தனர்.
  • மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாலங்காடு அடுத்த சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (23). இவர் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர்.மணி மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். நேற்று இரவு உடற்பயிற்சி முடிந்த பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்.

அப்போது மணியை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து கட்டை மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கினர். மணியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் மப்பேடு போலீசுக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த மணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News