உள்ளூர் செய்திகள்
திருக்கழுகுன்றம் அருகே ஏரியில் மூதாட்டி பிணம்
- அச்சரவாக்கம் ஏரியில் மீனாட்சி பிணமாக கிடந்தார்.
- திருக்கழுகுன்றம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
திருக்கழுகுன்றம் அடுத்த ரத்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது85). கடந்த மாதம் 31-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இந்தநிலையில் அச்சரவாக்கம் ஏரியில் மீனாட்சி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.