உள்ளூர் செய்திகள்

கார் முழுவதும் நூற்றுக்கணக்கான சில்வர் டிபன் பாக்ஸ் இருந்ததால் பரபரப்பு

Published On 2024-03-19 08:19 GMT   |   Update On 2024-03-19 08:19 GMT
  • தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • காரின் பின்புறம் மூட்டை மூட்டையாக சில்வர் டிபன் பாக்ஸ்கள் நூற்றுக்கணக்கில் இருந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த நெடுங்குணம் பகுதியில் அமைந்துள்ள போளூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேளாண் அலுவலர் வசந்த் குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து போளூரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது அதனை நிறுத்தி சோதனையில் ஈடுபடும் பொழுது காருக்குள் இருந்த பொருட்களால் தேர்தல் பறக்கும் படையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரின் பின்புறம் மூட்டை மூட்டையாக சில்வர் டிபன் பாக்ஸ்கள் நூற்றுக்கணக்கில் இருந்துள்ளன இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் பறக்கும் படையினர் இது குறித்து விசாரித்துள்ளனர் காரில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தில் மஞ்சள் நீராட்டு விழா எனவும் அவற்றிற்கு வருபவர்களுக்கு பரிசு அளிக்க சென்னையிலிருந்து குறைந்த விலையில் வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அதற்கு உண்டான ரசீதையும் தேர்தல் பறக்கும் படையினரிடம் காண்பித்தனர்.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இந்நிகழ்வின் போது காவலர்கள் வேண்டா, சரவணன், சிவா, ஒளிப்பதிவாளர் சேட்டு உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News